திருக்குறள்

1233.

தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.

திருக்குறள் 1233

தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.

பொருள்:

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

மு.வரததாசனார் உரை:

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.